''புதிய சட்டங்களின்றி தேர்தலை நடத்த முடியாது''

புதிய சட்டங்களை நிறைவேற்றாமல் மாகாண சபை தேர்தலை நடத்த முடியாது -  சட்டமா அதிபர் அறிவித்ததாக தினேஷ் குணவர்தன தெரிவிப்பு 

by Staff Writer 09-10-2021 | 3:47 PM
Colombo (News 1st) புதிய சட்டங்களை நிறைவேற்றாமல், ஏதேனுமொரு வகையில் மாகாண சபை தேர்தலை நடத்த முடியாதென சட்டமா அதிபர் அறிவித்ததாக பாராளுமன்ற விசேட செயற்குழு சபை தலைவர் தினேஷ் குணவர்தன சபையில் தெரிவித்தார்.