திங்கட்கிழமை முதல் பல்கலை மாணவர்களுக்கு தடுப்பூசி

திங்கட்கிழமை முதல் பல்கலைக்கழக மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி

by Staff Writer 09-10-2021 | 12:59 PM
Colombo (News 1st) பல்கலைக்கழக மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை (11) ஆரம்பமாகவுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் அசேல குணவர்தன குறிப்பிட்டார். பல்கலைக்கழகங்களிலேயே மாணவர்களுக்கு தடுப்பூசிகள் வழங்கப்படும் என அவர் கூறினார். இதனிடையே, பல்கலைக்கழகங்களை மீள திறப்பதற்கான சுகாதார வழிகாட்டல்கள் வௌியிடப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.