பெட்ரோலியவளங்கள் சட்டமூலத்தில் சபாநாயகர் கையொப்பம்

பெட்ரோலிய வளங்கள் சட்டமூலத்தில் சபாநாயகர் கையொப்பம்

by Staff Writer 08-10-2021 | 5:28 PM
Colombo (News 1st) பெட்ரோலிய வளங்கள் சட்டமூலத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (08) முற்பகல் கையெழுத்திட்டுள்ளார். இந்தச் சட்டமூலம் கடந்த 06 ஆம் திகதி பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டதுடன், வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப்பட்டிருந்தது. பெட்ரோலிய அபிவிருத்தி அதிகார சபையை ஸ்தாபிப்பதற்கும் ஆரம்பநிலை பெட்ரோலிய கைத்தொழில் தொடர்பான தேசிய கொள்கையொன்றை உருவாக்குவதற்கும் இந்தச் சட்டமூலம் உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, 2021 ஆம் ஆண்டு 21 ஆம் இலக்க பெட்ரோலிய வளங்கள் சட்டம் இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.