Sinopharm ஏற்றிக்கொண்ட பணியாளர்களுக்கான அறிவித்தல்

Sinopharm தடுப்பூசியை செலுத்திக்கொண்ட இலங்கை பணியாளர்களுக்கான அறிவித்தல்

by Staff Writer 07-10-2021 | 9:21 AM
Colombo (News 1st) Sinopharm தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் (Dose) செலுத்திக்கொண்ட இலங்கை பணியாளர்கள் பூஸ்டர் தடுப்பூசியாக பைசர் தடுப்பூசியை பெற்று தமது நாடுகளுக்கு வருமாறு கட்டார் மற்றும் சவூதி அரேபியா ஆகிய நாடுகள் அறிவித்துள்ளன. மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு தொழில் நிமித்தம் செல்வதற்கு பைசர் தடுப்பூசி பெற்றுக்கொள்வது அத்தியாவசியம் என வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. தொழில் நிமித்தம் வௌிநாடுகளுக்கு செல்வதற்காக வேலைவாய்ப்பு பணியகத்தில் சுமார் 20,000 பேர் பதிவு செய்துள்ளனர். இவர்களில் முதல் கட்டமாக சுமார் 8,000 பேருக்கே பைசர் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஏனையோருக்கும் வழங்குவதற்காக பைசர் தடுப்பூசியை பெற்றுத்தருமாறு சுகாதார அமைச்சிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக வேலைவாய்ப்பு பணியகத்தின் பொதுமுகாமையாளர் மங்கள ரந்தெனிய தெரிவித்துள்ளார்.