20 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் மூன்றாவது தடுப்பூசி - வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத்

by Staff Writer 07-10-2021 | 6:23 PM
Colombo (News 1st) 20 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் மூன்றாவது தடுப்பூசியை வழங்குவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார். இன்று (07) நடைபெற்ற ஊடக சந்திப்பில் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இது தொடர்பில் தௌிவுபடுத்தியுள்ளார்.