15 ஆம் திகதி முதல் ரயில் ​சேவைகள் மீள ஆரம்பம்

15 ஆம் திகதி முதல் ரயில் ​சேவைகள் மீள ஆரம்பம்

by Staff Writer 07-10-2021 | 4:14 PM
Colombo (News 1st) எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் ரயில் சேவைகளை மீள ஆரம்பிக்கவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர, இன்று (07) காலை மலையக ரயில் மார்க்கத்தின் புனரமைப்பு பணி மேற்பார்வையின் போது இதனை குறிப்பிட்டார்.