Colombo (News 1st) பாகிஸ்தானின் பலூசிஸ்தான் (
Balochistan) மாகாணத்தில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் சிக்கி குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இன்று (07) அதிகாலை 5.9 ரிக்டர் அளவில் ஏற்பட்ட இந்த நில நடுக்கத்தினால் பலியானோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
இதன்போது பெண்களும் சிறுவர்களுமே அதிகளவில் உயிரிழந்துள்ளதாக ரொயிட்டர்ஸ் செய்தி குறிப்பிட்டுள்ளது.
இந்த நில நடுக்கத்தில் சிக்கி குறைந்தது 150 பேர் காயமடைந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நூற்றுக்கும் அதிக வீடுகள் மற்றும் பல கட்டடங்களும் சேதமடைந்துள்ளன.