மேலும் 43 கொரோனா மரணங்கள் அறிவிப்பு

மேலும் 43 கொரோனா மரணங்கள் அறிவிப்பு; இதுவரை 13,102 பேர் உயிரிழப்பு

by Bella Dalima 05-10-2021 | 11:20 AM
Colombo (News 1st) மேலும் 786 கொரோனா நோயாளர்கள் நேற்று (04) அடையாளம் காணப்பட்டனர். அதற்கமைய, நாட்டில் இதுவரை 5,21,218 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, மேலும் 43 கொரோனா மரணங்களும் நேற்று அறிவிக்கப்பட்டன. இந்த மரணங்கள் அனைத்தும் கடந்த 03 ஆம் திகதி பதிவாகியவை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களில் 60 வயதிற்கு மேற்பட்ட 31 பேர் அடங்கியுள்ளனர். நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13,102 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளாகியவர்களில் 4,77,374 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர்.

ஏனைய செய்திகள்