இயற்பியல், மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு

இயற்பியல் மற்றும் மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு

by Bella Dalima 05-10-2021 | 5:03 PM
Colombo (News 1st) நடப்பு ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாண்டிற்கான நோபல் பரிசுகள் நேற்றைய தினத்தில் இருந்து எதிர்வரும் 11 ஆம் திகதி வரை அறிவிக்கப்படுகிறது. இந்நிலையில், இயற்பியலுக்கான நோபல் பரிசு பெறுபவர்கள் குறித்து இன்று அறிவிக்கப்பட்டது. புவியின் காலநிலையில் மாறுபாட்டை அளவிடுதல் மற்றும் வெப்பமடைதலை கணித்தல் ஆகியவற்றிற்காக Syukuro Manabe, Klaus Hasselmann மற்றும் Giorgio Parisi ஆகியோருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது. முன்னதாக, நேற்று (04) அமெரிக்காவின் David Julius மற்றும் Ardem Patapoutian ஆகியோருக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. வெப்பம், உடல் வலியை தொடாமல் உணரும் சென்சார் கருவியை கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு இவர்களுக்கு வழங்கப்படுகிறது.