இந்திய - இலங்கை மீன்பிடி படகுகள் நேருக்கு நேர் மோதல்

by Bella Dalima 05-10-2021 | 5:18 PM
Colombo (News 1st) இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த இந்திய இழுவைப் படகு, யாழ்ப்பாணம் - குருநகர் பகுதி மீனவரின் படகினை நேராக மோதி சேதப்படுத்தியுள்ளது. நெடுந்தீவை அண்மித்த கடற்பரப்பில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக மீனவர்கள் தெரிவித்தனர். கடந்த 10 நாட்களில் இலங்கை கடலில் இந்திய மீனவர்களின் அத்துமீறல் பதிவான நான்காவது சந்தர்ப்பம் இதுவாகும். குருநகர் பகுதியில் இருந்து ஒரு படகில் மூன்று மீனவர்கள் நேற்றிரவு கடற்றொழிலுக்கு சென்றுள்ளனர். இந்த மீனவர்களின் படகை, இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்களின் படகு இன்று அதிகாலை 3 மணியளவில் தாக்கியுள்ளது.