by Bella Dalima 04-10-2021 | 7:32 PM
Colombo (News 1st) பண்டோரா ஆவணத்தில் (Pandora Papers) வௌிக்கொணரப்பட்ட தகவல்கள் தொடர்பாக இலங்கை சுயாதீன விசாரணையை உடனடியாக நடத்த வேண்டும் என Transparency International Sri Lanka நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.
பண்டோரா வௌிப்படுத்திய நிதி கொடுக்கல் வாங்கல்கள் இலங்கையின் பொது உடைமைகள் தவறாக பயன்படுத்தப்பட்டதன் மூலம் ஈட்டப்பட்ட பணமா என்பது தொடர்பில் விரிவான உள்ளக விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் அந்த நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.