அம்பன்பொல தெற்கு கிராம உத்தியோகத்தர் கொலை

அம்பன்பொல தெற்கு கிராம உத்தியோகத்தர் கொலை

by Bella Dalima 04-10-2021 | 3:06 PM
Colombo (News 1st) அம்பன்பொல தெற்கு கிராம உத்தியோகத்தர் கொலை செய்யப்பட்டுள்ளார். கிராம உத்தியோகத்தர் காயங்களுடன் வீழ்ந்திருப்பதாக இன்று காலை தகவல் கிடைத்ததாக பொலிஸார் தெரிவித்தனர். அவர் வெட்டுக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் பொலிஸார் உறுதிப்படுத்தினர். மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த கிராம உத்தியோகத்தரை, காரில் பயணித்த சிலர் தாக்கிவிட்டு தப்பிச்சென்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். காரின் இலக்கத்தகடு அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 50 வயதுடைய கிராம உத்தியோகத்தரின் சடலம் மீதான பிரேத பரிசோதனை இடம்பெறவுள்ளது.