English
සිංහල
எழுத்தாளர் Bella Dalima
04 Oct, 2021 | 11:30 am
Colombo (News 1st) மன்னாரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதன் பின்னர் திடீர் சுகயீனமுற்ற நிலையில் சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
உயிரிழந்த சந்தேகநபருடன் கைது செய்யப்பட்ட மற்றுமொரு சந்தேகநபரிடம் வாக்குமூலத்தை பதிவு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வட மாகாண பொறுப்பதிகாரி தங்கவேல் கனகராஜ் தெரிவித்தார்.
உயிரிழந்த இளைஞரின் சடலம் மீதான பிரேத பரிசோதனை மன்னார் பொது வைத்தியசாலையில் இன்று மேற்கொள்ளப்படவுள்ளது.
இளைஞரின் சடலம் மீது மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என நேற்று உறுதி செய்யப்பட்டது.
மன்னார் – எருக்கலம்பிட்டி, புதுக்குடியிருப்பு பிரதான வீதியில் கடந்த முதலாம் திகதி இரவு முச்சக்கரவண்டியை சோதனைக்குட்படுத்திய மன்னார் பொலிஸார், போதைப்பொருள் வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் இருவரை கைது செய்தனர்.
இவர்களில் ஒருவர் திடீர் சுகயீனம் காரணமாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
எருக்கலம்பிட்டி – தர்கா நகர் பகுதியை சேர்ந்த 29 வயதான சம்சுதீன் மொஹமட் ரிம்ஷான் என்பவரே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த இளைஞருடன் கைது செய்யப்பட்ட மற்றுமொரு சந்தேகநபர் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
04 Nov, 2022 | 11:55 AM
11 Jul, 2022 | 03:08 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS