by Bella Dalima 03-10-2021 | 2:00 PM
Colombo (News 1st) சாவகச்சேரி - நாவற்குழி பிரதேசத்தில் உள்ள வீடொன்றினுள் நுழைந்து திருடர்கள் அங்கிருந்த பொருட்களை திருடிச் சென்றுள்ளனர்.
வீட்டில் இருந்த தாயும் மகனும் இதன்போது திருடர்களால் தாக்கப்பட்டுள்ளனர். அவர்கள் காயங்களுடன் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று (03) அதிகாலை 4 மணியளவில் திருடர்கள் குறித்த வீட்டில் இருந்து வௌியேறியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.
சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.