இலங்கை விமான சேவைக்கு COPE குழு அழைப்பு

இலங்கை விமான சேவைக்கு COPE குழு அழைப்பு

by Staff Writer 03-10-2021 | 5:44 PM
Colombo (News 1st) பொது முயற்சியாண்மைக்கான பாராளுமன்ற தெரிவுக்குழு எனப்படும் COPE குழுவில் எதிர்வரும் 7 ஆம் திகதி ஆஜராகுமாறு இலங்கை விமான சேவைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. விமான சேவைகள் மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்பு வலய இராஜாங்க அமைச்சினால் COPE குழுவில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கை தொடர்பிலான விடயங்களை கலந்துரையாடுவதற்காக இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் 7 ஆம் திகதி இலங்கை விமான சேவைக்கு COPE குழு அழைப்பு விடுத்திருந்தது. இதனிடையே, எதிர்வரும் 6 ஆம் திகதி இலங்கை போக்குவரத்து சபையும் COPE குழுவில் ஆஜராகவுள்ளது.