by Staff Writer 03-10-2021 | 11:40 AM
Colombo (News 1st) இன்று (03) சர்வதேச மது ஒழிப்பு தினமாகும்.
இதனால் நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்படுவதாக இலங்கை மதுவரி திணைக்களம் அறிவித்துள்ளது.
மது பாவனையினால் ஏற்படக்கூடிய நோய்கள், விபத்துகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய பல்வேறு நடவடிக்கைகளால் நாளாந்தம் நாட்டில் 75 முதல் 80 பேர் உயிரிழப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
15 முதல் 24 வயதிற்கிடைப்பட்டவர்கள் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகின்றமை பாரதூரமான பிரச்சினை என புகையிலை மற்றும் மதுபானங்கள் தொடர்பான தேசிய அதிகார சபையின் தலைவர் கலாநிதி சமாதி ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.