by Bella Dalima 02-10-2021 | 10:30 AM
Colombo (News 1st) 2022 நிதியாண்டிற்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீடு எதிர்வரும் புதன்கிழமை (06) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தை திங்கட்கிழமை முதல் வௌ்ளிக்கிழமை வரை ஐந்து நாட்களுக்கு கூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் குறிப்பிட்டார்.
இதற்கமைய, ஒக்டோபர் 04 ஆம் திகதி திங்கட்கிழமை நாள் முழுவதும் வாய்மூல பதில்களை பெறுவதற்காக முன்வைக்கப்பட்ட வினாக்களுக்கான விசேட பாராளுமன்ற அமர்வு தினமாக ஒதுக்கப்பட்டுள்ளது.