யாழில் பஸ் சக்கரத்தில் சிக்கிய பெண் மரணம்

யாழில் பஸ் சக்கரத்தில் சிக்கிய பெண் மரணம்

by Bella Dalima 02-10-2021 | 4:11 PM
Colombo (News 1st) யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்தில் பஸ் சக்கரத்தில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ். மத்திய பஸ் நிலையத்தினுள் இன்று காலை நுழைந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸில் மோதிய குறித்த பெண், சக்கரத்தில் சிக்கி காயமடைந்துள்ளார். படுகாயமடைந்த பெண்ணை அங்கிருந்தவர்கள் யாழ். போதனா வைத்திய சாலையில் அனுமதித்துள்ளனர். எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். மருதனார்மடத்தை சேர்ந்த 69 வயதான பெண்ணே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

ஏனைய செய்திகள்