118,21,000 ​பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது

சுமார் 1,18,21,000 ​பேருக்கு இரண்டு தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளன

by Bella Dalima 02-10-2021 | 12:20 PM
Colombo (News 1st) நாட்டில் நேற்று 72,475 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதற்கிணங்க, நாட்டில் இதுவரை 1,45,55,215 பேர் முதலாவது தடுப்பூசியை பெற்றுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. 1,18,21,594 ​பேர் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டுள்ளனர். இதனிடையே, நாட்டில் நேற்று 58 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. இவர்களில் 60 வயதிற்கும் மேற்பட்ட 48 பேர் அடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதற்கிணங்க, இலங்கையில் பதிவான கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 12,964 ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே, நேற்று 893 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதுவரை நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 5 ,18,775 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நேற்று 597 பேர் தொற்றிலிருந்து குணமடைந்ததுடன், குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 4,58,085 ஆக பதிவாகியுள்ளது.