5 மாவட்டங்களின் சில பிரதேசங்களுக்கு மண்சரிவு முன்னெச்சரிக்கை

by Staff Writer 01-10-2021 | 7:54 PM
Colombo (News 1st) நிலவும் மழையுடன் கூடிய வானிலை காரணமாக 05 மாவட்டங்களின் சில பிரதேச செயலக பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது. அந்தவகையில் காலி, களுத்துறை, கண்டி, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களின் சில பிரதேசங்களுக்கே இவ்வாறு மண்சரிவு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.