வட கொரிய - தென் கொரிய Hotline சேவை மீள ஆரம்பம்

தென் கொரியாவுடனான Hotline சேவையை மீள ஆரம்பிக்க கிம் ஜோங் உன் இணக்கம்

by Staff Writer 30-09-2021 | 10:14 AM
Colombo (News 1st) தென் கொரியாவுடனான தகவல் தொடர்பாடல் சேவையை மீள புதுப்பிக்க வட கொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன் இணக்கம் தெரிவித்துள்ளார். நல்லிணக்கத்திற்கு சாத்தியமான வகையில் இந்த சேவையை மீள ஆரம்பிக்க வட கொரிய ஜனாதிபதி விருப்பம் தெரிவித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இதனடிப்படையில், அடுத்த மாதம் முதல் இரு நாடுகளுக்கும் இடையிலான Hotline சேவைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன. 2015 ஆம் ஆண்டுக்குப் பின்னர் வட கொரிய மற்றும் தென் கொரிய அரசு நிலையிலான நேரடி தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.