தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீக்கப்பட்டாலும் மாகாண பயணத் தடை தொடர்ந்தும் அமுல் - இராணுவ தளபதி

by Staff Writer 30-09-2021 | 11:54 AM
Colombo (News 1st) தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டாலும் மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாட்டை கட்டாயமாக தொடர்ந்தும் பின்பற்ற வேண்டியேற்படுவதாக இராணுவத் தளபதி, ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். நாடளாவிய ரீதியில் அமுலிலுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை நாளை (01) அதிகாலை 04 மணிக்கு நீக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்திருந்தார்.