NMRA தரவு அழிப்பு; டிஜிட்டல் பயங்கரவாத செயற்பாடு

NMRA தரவுகள் அழிக்கப்பட்டமை டிஜிட்டல் பயங்கரவாத செயற்பாடு - பிரதி சொலிசிட்டர் ஜெனரல்

by Staff Writer 29-09-2021 | 4:22 PM
Colombo (News 1st) ​கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரான உதவி மென்பொருள் பொறியியலாளரால் கடந்த ஜூலை 09 ஆம் திகதி வீட்டிலிருந்து 05 மணித்தியாலங்கள் செலவிட்டு தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் (NMRA) தரவுகள் அழிக்கப்பட்டுள்ளதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல், நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளார். இது டிஜிட்டல் பயங்கரவாத செயற்பாடு என அவர் குறிப்பிட்டுள்ளார்.