by Staff Writer 29-09-2021 | 4:31 PM
Colombo (News 1st) நாடளாவிய ரீதியில் அமுலிலுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை எதிர்வரும் முதலாம் திகதி (வௌ்ளிக்கிழமை) அதிகாலை 04 மணிக்கு நீக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அவ்வாறு தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீக்கப்பட்டதன் பின்னர் செயற்பட வேண்டிய விதம் தொடர்பில் வழிகாட்டல் கோவையை வௌியிடுமாறும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாக இராணுவத் தளபதி மேலும் கூறியுள்ளார்.