by Staff Writer 29-09-2021 | 10:21 AM
Colombo (News 1st) உலக இருதய தினம் இன்று (29) அனுஷ்டிக்கப்படுகின்றது.
'ஆரோக்கியமான வாழ்க்கைக்கு இருதயபூர்வமாக இணைவோம்' என்ற தொனிப்பொருளில் இம்முறை உலக இருதய தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.
நாட்டில் வருடாந்தம் 45,000 பேர் இருதய நோயினால் உயிரிழப்பதாக இலங்கை இருதய நோய் விசேட வைத்திய நிபுணர்களின் சங்கத்தின் தலைவர், இருதய நோய் விசேட வைத்திய நிபுணர் அனிந்து பத்திரன தெரிவித்துள்ளார்.