Jaffna Stallions-ஐ வாங்கினார் அல்லிராஜா சுபாஸ்கரன்

Jaffna Stallions அணியை வாங்கினார் அல்லிராஜா சுபாஸ்கரன்

by Staff Writer 28-09-2021 | 10:40 PM
Colombo (News 1st) லங்கா பிரிமியர் லீக் எனப்படும் LPL போட்டியின் கிண்ணத்தை சுவீகரித்த ஜப்னா ஸ்டேலியன்ஸ் (Jaffna Stallions) அணியின் உரிமம் இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட வர்த்தகரான அல்லிராஜா சுபாஸ்கரனுக்கு சொந்தமான லைகா மொபைல் நிறுவனத்திற்கு கிடைத்துள்ளது. Jaffna Stallions அணியின் உரிமம் மாற்றமடைந்துள்ளமையினால் எதிர்காலத்தில் அணியின் பெயர் மற்றும் சின்னமும் மாற்றமடையும். இதேவேளை, முதலீட்டின் மூலம் இலங்கை கிரிக்கெட் அணியை முன்னேற்றுவதற்கு இந்தப் போட்டிகளை பயன்படுத்துவதற்கு தாம் முயற்சி செய்த போதிலும் துரதிர்ஷ்டவசமாக அது கிடைக்கவில்லை என கடந்த வருடம் போட்டியின் போது Jaffna Stallions அணியின் உரிமையாளர்கள் அந்த அணியின் பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தனர். தமது ரசிகர்களிடம் மன்னிப்பு கோருவதாக அவர்கள் இதன்போது குறிப்பிட்டிருந்தனர். LPL இரண்டாம் கட்டம் எதிர்வரும் டிசம்பர் 04 ஆம் திகதியில் இருந்து டிசம்பர் 23 ஆம் திகதி வரை ஐந்து அணிகளின் பங்களிப்புடன் நடைபெறவுள்ளது.