by Staff Writer 28-09-2021 | 1:32 PM
Colombo (News 1st) மத்துகம - யட்டதொலவத்த பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடொன்றிலிருந்து ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
ஒரு கிலோ 55 கிராம் ஹெரோயின், 50 கிராம் ஐஸ் போதைப்பொருள், மைக்ரோ ரக துப்பாக்கி மற்றும் போதைப்பொருளை அளவிடுவதற்கு பயன்படுத்தப்படும் தராசு ஆகியன குறித்த வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.