பிரதமர் - இந்திய உயர்ஸ்தானிகர் சந்திப்பு

by Staff Writer 28-09-2021 | 8:20 PM
Colombo (News 1st) பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இன்று (28) இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயை (Gopal Baglay) சந்தித்துள்ளார். அலரி மாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இரு தரப்பு விடயங்கள் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ள போதிலும், கலந்துரையாடப்பட்ட விடயதானங்கள் குறித்து இரு தரப்பும் வௌியிடவில்லை.