செல்வராசா கஜேந்திரனின் கைதை எதிர்த்து யாழ். மாநகர சபையின் கண்டன தீர்மானம் நிறைவேற்றம்

by Staff Writer 28-09-2021 | 7:28 PM
Colombo (News 1st) பாராளுமன்ற உறுப்பினரான எஸ். கஜேந்திரன் கடந்த 23 ஆம் திகதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ். மாநகர சபையின் கண்டன தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. யாழ். மாநகர சபை அமர்வு இன்று (28) நடைபெற்றது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் எஸ். கிருபாகரனினால் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனின் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரேரணை முன்வைக்கப்பட்டது. இதன் பின்னர் கண்டன தீர்மானம் சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.