by Staff Writer 28-09-2021 | 9:37 AM
Colombo (News 1st) கொரோனா நோயாளர்களில் 83 பேர் இதுவரையில் அவசர சிகிச்சைப் பிரிவுகளில் (ICU) சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சிகிச்சை மத்திய நிலையங்களில் 382 நோயாளர்கள் ஒக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெற்று வருவதாக கொவிட் - 19 தொடர்பான இணைப்பு செயலணியின் பணிப்பாளர், வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னர் ஒக்சிஜன் தேவையுடைய நோயாளர்களின் எண்ணிக்கை 1,100 ஆக அதிகரித்திருந்தது.
நாட்டில் 275 கொரோனா சிகிச்சை நிலையங்கள் தற்போது இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.