அரிசி ஆலை உரிமையாளர்களின் அரிசி விலை நியாயமற்றது - லசந்த அழகியவன்ன

by Staff Writer 28-09-2021 | 5:58 PM
Colombo (News 1st) அரிசி ஆலை உரிமையாளர்களால் அறிவிக்கப்பட்ட அரிசி விலை நியாயமற்றது என இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார். அரிசி ஆலை உரிமையாளர்கள், அரிசிக்கான சில்லறை விலையை இன்று (28) அறிவித்திருந்தனர். அதனடிப்படையில், ஒரு கிலோகிராம் நாட்டரிசி                     – 115 ரூபா ஒரு கிலோகிராம் சம்பா அரிசி               – 140 ரூபா ஒரு கிலோகிராம் கீரி சம்பா அரிசி       – 165 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது.