விமான நிலையத்தின் புதிய PCR ஆய்வுகூடம் ஆரம்பிக்கப்படவில்லை - விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத்

by Staff Writer 27-09-2021 | 4:31 PM
Colombo (News 1st) கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அருகில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய PCR பரிசோதனை கூடம் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவில்லை என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். விமான பயணிகளுக்காக தற்போதும் பழைய முறையிலேயே பரிசோதனைகள் முன்னெடுக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டார். இதற்கான கொள்ளளவு தொடர்பில் ஆராய வேண்டும் என்பதுடன் அதனை தொடர்ச்சியாக செயற்படுத்த வேண்டுமாயின் பல பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் மேலும் கூறியுள்ளார்.