மன்னாரில் ஊடகவியலாளர் வீட்டின் மீது கல்வீச்சு

மன்னாரில் ஊடகவியலாளர் வீட்டின் மீது கல்வீச்சு தாக்குதல் 

by Staff Writer 26-09-2021 | 1:06 PM
Colombo (News 1st) மன்னார் - பண்டிவிரிச்சான் பகுதியில் ஊடகவியலாளர் ஒருவரின் வீட்டின் மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்றிரவு (25) இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். அடையாளம் தெரியாதவர்களினால் ஊடகவியலாளரின் வீட்டின் மீது கல்வீச்சு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை மடு பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.