தொண்டைமானாறு கடல் நீரேரியில் இருந்து சடலம் மீட்பு

தொண்டைமானாறு கடல் நீரேரியில் இருந்து முதியவரின் சடலம் மீட்பு

by Staff Writer 26-09-2021 | 11:50 AM
Colombo (News 1st) தொண்டைமானாறு கடல் நீரேரியில் இருந்து முதியவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடல் நீரேரியில் இன்று காலை மீன் பிடிக்க சென்றவர்கள் சடலமொன்று மிதப்பதாக அச்சுவேலி பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். இதனை தொடர்ந்து நீரில் மூழ்கிய நிலையில் முதியவர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 80 வயது மதிக்கத்தக்க முதியவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஆலயத்திற்கு வந்த முதியவர் நீரேரியில் குளிக்க முற்பட்ட சந்தர்ப்பத்தில் நீரில் மூழ்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. சடலமாக மீட்கப்பட்டவர் இதுவரை அடையாளம் காணப்படவில்லையென பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.