சட்டவிரோதமாக காணி துப்புரவில் ஈடுபட்ட மூவர் கைது

சட்டவிரோதமாக காணி துப்புரவில் ஈடுபட்ட மூவர் மட்டக்களப்பில் கைது

by Staff Writer 26-09-2021 | 12:35 PM
Colombo (News 1st) மட்டக்களப்பு - வாழைச்சேனையில் சட்டவிரோதமாக காணி ஒன்றை துப்புரவு செய்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காணியை துப்புரவு செய்ய பயன்படுத்தப்பட்ட உழவு இயந்திரத்தையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். 58, 63 மற்றும் 65 வயதான மூன்று பேரே கைது செய்யப்பட்டுள்ளனர். வாழைச்சேனை கும்பலந்தென்ன பகுதியில் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடம் ஒன்றை துப்புரவு செய்தமை தொடர்பிலேயே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களை வாழைச்சேனை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வாழைச்சேனை பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.