குலோத்துங்க சோழர் காலத்தில் பூஜிக்கப்பட்டதாக நம்பப்படும் தொன்மையான சிலைகள் நாகையில் மீட்பு

by Staff Writer 26-09-2021 | 10:10 PM
Colombo (News 1st) குலோத்துங்க சோழர் காலத்தில் பூஜிக்கப்பட்டதாக நம்பப்படும் தொன்மையான சிலைகள் நாகையில் மீட்பு தமிழகத்தின் நாகை மாவட்டத்திலுள்ள தேவபுரீஸ்வரர் கோவிலில் திருப்பணிகள் இடம்பெற்று வரும் நிலையில், அங்கிருந்து தொன்மையான சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. நிர்மாணப் பணிகளுக்காக நிலத்தை தோண்டத் தோண்ட அதிகளவிலான ஐம்பொன் சிலைகளும் பூஜை ​பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த சிலைகள் குலோத்துங்க சோழர் காலத்தில் பூஜிக்கப்பட்டவை என நம்பப்படுகிறது.