களுவாஞ்சிக்குடியில் மோட்டார் குண்டு மீட்பு

by Staff Writer 26-09-2021 | 3:26 PM
Colombo (News 1st) மட்டக்களப்பு - களுவாஞ்சிக்குடி, பட்டிருப்பு பாலத்தின் கீழிலிருந்து மோட்டார் குண்டொன்று மீட்கப்பட்டுள்ளது. இன்று (26) காலை மீனவர் ஒருவரின் வலையிலிருந்து இந்த மோட்டார் குண்டு மீட்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றத்தில் அனுமதி பெறப்பட்டதன் பின்னர் மோட்டார் குண்டை செயலிழக்க செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.

ஏனைய செய்திகள்