by Staff Writer 26-09-2021 | 1:13 PM
Colombo (News 1st) இலங்கைக்கு கடத்தப்படவிருந்த சுமார் ஒன்றரை கோடி இந்திய ரூபா மதிப்பிலான மஞ்சள் தமிழகத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இலங்கைக்கு கடத்துவதற்காக மண்டபத்தை அடுத்துள்ள வேதாளை பகுதியில் வீடொன்றில் இந்த மஞ்சள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது.
மூடைகளில் பொதியிடப்பட்டிருந்த நிலையில் வைக்கப்பட்டிருந்த மஞ்சளை கைப்பற்றிய Q-பிரிவு பொலிஸார், தப்பியோடிய கடத்தல்காரர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இலங்கையில் மஞ்சள் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் காரணமாக அண்மைக்காலமாக தமிழகத்தில் இருந்து மஞ்சள் கடத்தப்படுகின்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளன.