பலத்த காற்று, மழையுடன் கூடிய வானிலை அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கும்

பலத்த காற்று, மழையுடன் கூடிய வானிலை அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கும்

பலத்த காற்று, மழையுடன் கூடிய வானிலை அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கும்

எழுத்தாளர் Staff Writer

26 Sep, 2021 | 4:40 pm

Colombo (News 1st) தென்மேற்கு பிராந்தியத்தில் நிலவும் பலத்த மழை மற்றும் கடும் காற்றுடன் கூடிய வானிலை அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு தொடரக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் 100 மில்லிமீட்டருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடமத்திய, வடமேல், தென் மற்றும் மேல் மாகாணங்களிலும் காற்றின் வேகம் 50 முதல் 60 கிலோமீட்டரை விட அதிகரிக்கும் எனவும் திணைக்களம் அறிவித்துள்ளது.

பலத்த காற்றினால் ஏற்படக்கூடிய சேதங்களை குறைத்துக்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்