இலங்கையில் 70% வலு சக்தியை ஏற்படுத்த நடவடிக்கை

2030 ஆம் ஆண்டளவில் இலங்கையில் 70% வலு சக்தியை ஏற்படுத்த நடவடிக்கை: ஜனாதிபதி

by Bella Dalima 25-09-2021 | 11:09 AM
Colombo (News 1st) ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்திற்கு இணையாக நடத்தப்படும் எரிசக்தி தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நேற்று (24) கலந்துகொண்டார். நிலை பேண்தகு எரிசக்தி அபிவிருத்திக்கு இலங்கையில் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி இதன்போது கூறியுள்ளார். 2030 ஆம் ஆண்டளவில் இலங்கையில் 70 வீதமான வலு சக்தியை ஏற்படுத்தவும் மீள்புதுபிக்கத்தக்க சக்தியை வலுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இலங்கையில் புதிதாக நிலக்கரி மின்னுற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கான அனுமதி வழங்குவதை இரத்து செய்தமையூடாக, காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியமை தொடர்பிலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தனது உரையில் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டில் சூரிய சக்தி மற்றும் காற்றாலை மின்னுற்பத்திகளை மேற்கொள்வதற்கான முதலீட்டாளர்களுக்கும் இதன்போது ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.