by Bella Dalima 25-09-2021 | 2:17 PM
Colombo (News 1st) யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பிற்கு காரில் கஞ்சா கடத்தி சென்ற மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.
A9 வீதியில் மாங்குளம் பகுதியில் கார் சோதனைக்குட்படுத்தப்பட்ட போது 6 கிலோகிராம் நிறையுடைய கஞ்சா கைப்பற்றப்பட்டது.
சந்தேகநபர்கள் மூவரும் இன்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.