வைத்தியசாலையில் கைக்குண்டு: மற்றுமொருவர் கைது

நாரஹேன்பிட்டி வைத்தியசாலையில் கைக்குண்டு மீட்கப்பட்டமை தொடர்பில் மற்றுமொரு சந்தேகநபர் கைது

by Bella Dalima 25-09-2021 | 1:44 PM
Colombo (News 1st) நாரஹேன்பிட்டி தனியார் வைத்தியசாலையில் இருந்து கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். திருகோணமலை - கன்னியா, விளாங்குளம், பீலியடி பகுதியை சேர்ந்த 22 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ தெரிவித்தார். பிரதான சந்தேகநபரிடம் ​மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்து, இவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் பிரதான சந்தேகநபருக்கு குண்டை வடிவமைக்க உதவியுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார். கடந்த 14 ஆம் திகதி நாரஹேன்பிட்டி தனியார் வைத்தியசாலையில் இருந்து கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் தொடர்கின்றன.