உயிரிழந்தோர் எண்ணிக்கை 12,376 ஆக அதிகரிப்பு

COVID-19: நாட்டில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,376 ஆக அதிகரிப்பு

by Staff Writer 23-09-2021 | 10:40 AM
Colombo (News 1st) 1,342 கொரோனா நோயாளர்கள் நேற்று (22) அடையாளம் காணப்பட்டனர். நாட்டில் இதுவரை 5,08,672 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 4,35,022 பேர் குணமடைந்துள்ளனர். இதேவேளை, மேலும் 92 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. செப்டம்பர் 21 ஆம் திகதி இந்த மரணங்கள் பதிவாகியதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. உயிரிழந்தவர்களில் 41 ஆண்களும் 51 பெண்களும் அடங்குகின்றனர். அதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,376 ஆக அதிகரித்துள்ளது.