அதிக விலையில் பொருட்களை விற்றால் 5 இலட்சம் அபராதம்

அதிக விலையில் பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு 5 இலட்சம் ரூபா வரை அபராதம்

by Staff Writer 23-09-2021 | 11:15 AM
Colombo (News 1st) கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலையில் பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக விதிக்கப்படும் 1000 ரூபா முதல் 10,000 ரூபா வரையான அபராத தொகையை 1 இலட்சம் ரூபா தொடக்கம் 5 இலட்சம் ரூபா வரை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார். நுகர்வோர் விவகார அதிகார சபை திருத்த சட்டமூலம் நேற்று (22) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. புதிய திருத்த சட்டத்தின் ஊடாக அதிக விலையில் பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிரான அபராத தொகையை அதிகரிக்க முடியும் என இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார். நிர்ணய விலைக்கு அமைவாக விற்பனையில் ஈடுபடாத வர்த்தகர்கள் தொடர்பில் அறிந்துகொள்வதற்கான சுற்றிவளைப்பு நடவடிக்கை நாடு முழுவதும் முன்னெடுக்கப்படுவதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண கூறினார்.