by Staff Writer 23-09-2021 | 7:32 PM
Colombo (News 1st) நாட்டில் மேலும் 72 கொரோனா மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,448 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, இன்று (23) இதுவரையில் 918 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 5,09,590 ஆக அதிகரித்துள்ளது.
அவர்களில் 4,51,742 பேர் குணமடைந்துள்ளனர்.