மட்டக்களப்பு வாவியில் மிதந்த சடலம் மீட்பு

மட்டக்களப்பு வாவியில் மிதந்த சடலம் மீட்பு

by Bella Dalima 22-09-2021 | 7:23 PM
Colombo (News 1st) மட்டக்களப்பு வாவியின் குருமன்வெளி ஆற்றுப் பகுதியில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருமன்வெளி, 12 ஆம் வட்டாரம் பழைய தபால் நிலைய வீதியில் வசித்த 68 வயதான ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு வாவியில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் சடலம் மிதப்பதை அவதானித்து, களுவாஞ்சிக்குடி பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து சடலம் மீட்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனைக்காக சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.