12 வயதுக்கு மேற்பட்ட விசேட தேவையுடைய சிறுவர்களுக்கு Pfizer தடுப்பூசி 

by Staff Writer 21-09-2021 | 6:05 PM
Colombo (News 1st) எதிர்வரும் 24 ஆம் திகதி வௌ்ளிக்கிழமை முதல் 12 வயதுக்கு மேற்பட்ட விசேட தேவையுடைய சிறுவர்களுக்கு பைசர் (Pfizer) தடுப்பூசியை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார். அதனடிப்படையில், கொழும்பு சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையிலேயே தடுப்பூசி ஏற்றப்படவுள்ளது.