தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 509 பேர் கைது

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய மேலும் 509 பேர் கைது

by Staff Writer 21-09-2021 | 11:34 AM
Colombo (News 1st) தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய மேலும் 509 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் (20) காலை 6 மணி தொடக்கம் இன்று (21) காலை 06 மணி வரையான 24 மணி நேரத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த காலப்பகுதியில் 25 வாகனங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் இதுவரையான காலத்திற்குள் 76,145 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.