CID க்கு அழைத்தமைக்கான காரணத்தை கோரி மனுஷ நாணாயக்கார கடிதம்

by Staff Writer 20-09-2021 | 3:27 PM
Colombo (News 1st) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இன்றைய தினம் (20) ஆஜராகுமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணாயக்காரவுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், குற்றப்புலனாய்வு திணைக்களதிற்கு அழைத்தமைக்கான காரணத்தை கேட்டு பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணாயக்காரவின் சட்டத்தரணி கடிதம் ஒன்றை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் கையளித்துள்ளார்.