வீரகெட்டிய துப்பாக்கி சூட்டில் 14 வயது சிறுவன் உயிரிழப்பு

by Staff Writer 20-09-2021 | 8:34 AM
Colombo (News 1st) வீரகெட்டிய பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 14 வயதான சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இரு தரப்பினருக்கிடையில் ஏற்பட்ட மோதலில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். எவ்வாறாயினும், துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்ட நபரை கைது செய்யவதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ மேலும் குறிப்பிட்டார்.

ஏனைய செய்திகள்